தப்பித்தலின் சாத்தியங்கள்... நான் விதைக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு பரப்பினை வன்மமாய் நினைவூட்டுகின்றன இந்த தொட்டிச்செடிகள்.. விடுபடலோ விட்டு விடுதலையாதலோ சாத்தியமாவதில்லை எப்போதும்... வேர்களால் உள்வாங்கி பூக்களாய் எதிரொளித்து தளிர்நுனிகள் அனைத்திலும் உயிர்சொட்டும் விருட்சங்கள் காழ்ப்புணர்ச்சியோடு கசப்புத் தருகின்றன... தப்பித்தல்களுக்கான இடம் தேடிக்களைத்து எங்கேனும் எதிலேனும் ஒளிந்துகொள்ள முயன்று முடிவாய் மறைந்து போகிறேன் கவிதைகளின் பின்னால். credits gayathri http://gayatri8782.blogspot.com
naan yen nila yen kadal