23 August, 2007

மரம் மீண்டும் உதிர்க்கிறது மற்றுமோர் இலையை...

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
மரத்தை விட்டு
வெகுதூரம் வந்தாயிற்று.

அடுத்து அருவி என்பது
இலைக்குத் தெரியாது.
அது இலை என்பது
ஆற்றுக்கும் தெரியாது.
இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.

அது பயணமன்று.
எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.

ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.

அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.
விருட்டெனப் பறக்கிறது தும்பி.

மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை. அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

Credits: அழகுநிலா
Kalachuvadu.com http://www.kalachuvadu.com

No comments: