27 August, 2007

I used to believe ...

I wanted to shout
I wanted to cry
But I buried my sorrows
In the depths of my soul

Couldn’t stop - a tear or two
Didn’t let - the sighs to flow
I bear the pains - in my heart
Hiding the wound - that still bled

No one to heal - no one to care
Wanted to talk
But no one was to listen
Loneliness did griped - my mind

Confusion was – hard to define
I still do - remember that time
I used to believe – in life . . .

Credits: 4minutesperday.com

23 August, 2007

உன்னை நிறைத்த அறை



உன்னை நிறைத்த உனதறையில்
நீயில்லாதபோது நுழைந்தேன்

உறங்க நீ பட்ட பிரயத்தனங்கள்
படுக்கையில் கசங்கிக் கிடந்தன
சுவர் மூலையில்
உறுப்பின் அசௌரியங்கள்
சுருண்ட
உன் உள்ளாடைகள் கிடந்தன

அலம்பாத தேநீர் குப்பியில் ஒட்டியிருந்தது
உன் எச்சிலின் இனிப்பு
விரித்துக் கிடத்திய புத்தகத்திலிருந்து
கவிதையின் நெகிழ்ச்சி
அறையெங்கும் சுழன்றது

உன்னோடு வாய்க்காத பொழுதை
உன் வாழ்முறை இறைந்த அறையில்
உன் ஒழுங்கீனங்களோடு கழித்தேன்.

Credits : மா.சு. சரவணன்
Thanks: text : Kalachuvadu http://www.kalachuvadu.com Photos : allposters.com

நீ என்றான பிறகு

காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய்
அற்ப வாதங்களின் அருகில்
செல்ல நேர்கையில் திசைகள் பிரிகின்றன.

நெருக்கமான கணங்களில்
திணறுகிறது
நீ அழுத்தும் அன்பு.

பிரிவது இன்னும் தடித்த தூரத்தில்
என்பதற்காகவாவது நாம்
பிரிய முயற்சிக்கலாம்.

ஆனபின்னும்
மீதூர்ந்த காற்றின் சுவை தேடி
மருகுகிறது தேகம்

கம்பக்கட்டு வானத்தில்தெறித்துப் போவது
நீ சுழற்றிய நான்

Credits: அய்யப்பன்
Thanks: Kalachuvadu. http://www.kalachuvadu.com
மரம் மீண்டும் உதிர்க்கிறது மற்றுமோர் இலையை...

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
மரத்தை விட்டு
வெகுதூரம் வந்தாயிற்று.

அடுத்து அருவி என்பது
இலைக்குத் தெரியாது.
அது இலை என்பது
ஆற்றுக்கும் தெரியாது.
இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.

அது பயணமன்று.
எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.

ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.

அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.
விருட்டெனப் பறக்கிறது தும்பி.

மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை. அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

Credits: அழகுநிலா
Kalachuvadu.com http://www.kalachuvadu.com

22 August, 2007

எனது நிழல்களுக்கு நீ அஞ்சவேண்டியதுமில்லை


என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை

எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை

நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை

நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை

சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே

Credits : மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
http://uyirmmai.blogspot.com/2006/03/blog-post.html