உதிர்தலும் துளிர்த்தலும்...
வாரத்தின் ஏழு நாட்களும்
ஒன்றேபோலிருக்கின்றன...
நிறத்தில்..
வடிவில்..
அளவில்..
எதிலும் மாற்றமில்லை.
பகலில் தொடங்கி இரவில் முடியும்
இந்த நாட்களில்
எங்கு தொடங்கி எங்கு முடிகிறது
உன் நினைவென்பதை
அனுமானிக்க முடிவதில்லை..
தினமும் காகிதங்களின் வடிவில்
உதிர்ந்தபடியே இருக்கின்றன
நாட்களும் சில நம்பிக்கைகளும்..
என்றாலும்..
யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...
credits:
gayathri. http://gayatri8782.blogspot.com/
23 November, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//யாரேனும் எழுதிய கடிதமோ
கைவிட்டுப் போன உறவோ
தொலைந்து போன பொருளோ
நிச்சயம் கிடைக்கலாம்
இன்றைக்காவது...//
நல்ல வரிகளுடன் நல்ல கவிதை...
தினேஷ்
thanks dinesh.
that was from the following blog:
http://gayatri8782.blogspot.com/
extending the comments to the blogger.
: )
pirainilav
Post a Comment